ஆப்நகரம்

அடப்பாவி ரூல்ஸ்! தெரியாம இப்பிடியா ஸ்டம்ப்பை புடுங்குவ...? தப்பிய ஸ்மித்...!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்க கிடைத்த ஜூஜூபி வாய்ப்பை இலங்கை வீரர் சந்தகன் கோட்டைவிட்டார்.

Samayam Tamil 31 Oct 2019, 6:49 am
ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டி-20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Samayam Tamil Steve Smith Sandhakan Run out


கைப்பற்றிய ஆஸி.,
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என கைப்பற்றி முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டி வரும் நாளை மறுநாள்(நவம்பர்-1) மெல்போர்னில் நடக்கிறது.


ரூல்ஸ் தெரியல...
இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ரன் அவுட்டாக்க கிடைத்த நல்ல வாய்ப்பை ஆர்வக்கோளாறு காரணமாக இலங்கை வீரர் சந்தகன் கோட்டைவிட்டார். சந்தகன் பவுலிங்கில் டேவிட் வார்னர் அடித்த பந்து, நேராக எதிர்முனையில் இருந்த ஸ்டெம்பில் பட்டது.


வெளுத்து வாங்கிய ‘பேட் பாய்’ வார்னர்....: துவைத்து தொங்கவுட்ட ஸ்மித்...: தொடரை வென்ற ஆஸி.,!

வேஸ்ட் சந்தகன்...
அந்த நேரத்தில் எதிர்முனையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், கிரீசுக்கு வெளியே சென்றார். இதைப்பார்த்த சந்தகன், ஸ்டெம்ப்பை பந்தோடு சேர்த்து தூக்கியிருக்க வேண்டும். மாறாக பந்தை ஒருகையில் வைத்துக்கொண்டு, மறுகையில் ஸ்டெம்ப்பை தூக்கினார். இதனால் ஸ்மித் ரன் அவுட்டாகும் சுலப வாய்ப்பு வீணானது.


மீண்டும் சந்தகன்...
முன்னதாக இலங்கை அணி பேட்டிங் செய்த போது, இதேபோல சந்தகனை ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் ரன் அவுட் செய்தார். அதற்கு பழிக்கு பழி தீர்க்க, சந்தகன் நினைத்தது சரி தான் என்றாலும், கிரிக்கெட் விதியை மறந்தது பரிதாபம் தான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்