இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விராத் கோலிக்கு கோபமூட்டி கோப்பையைக் கைப்பற்றுவோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை பொறுமையிழக்கச் செய்து, கோபமூட்டி, கோப்பையைக் கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.
இந்தியத் துணைக்கண்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது ஆஸ்திரேலிய அணிக்கு கண்டிப்பாக சவாலானதாக இருக்கும். இந்தியா கடந்த 18 மாதங்களில் நிறைய டெஸ்ட் போட்டிகளில் வென்றிருக்கிறது. நிறைய போட்டிகள் சொந்த மண்ணிலேயே நடந்துள்ளன. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் அணியை அசாதாரணமான முறையில் வழிநடத்திச் சென்றிருக்கிறார். அவர் களத்தில் மிகவும் உணர்ச்சிகரமாக வீரர். ஆனால், தற்போது அந்த குணத்திலிருந்து சற்று மாறியிருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது விராத் கோலியை உணர்ச்சிவசப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிப்போம். பொறுமையிழக்கச் செய்து சற்று கோபமூட்டப் பார்ப்போம். இதைச் சரியாகச் செய்துவிட்டால் இந்தியாவுக்கு அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
விராத் கோலி 2016ஆம் ஆண்டில் மூன்று இரண்டை சதங்கள் அடித்திருக்கிறார். அத்துடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது டெஸ்ட் சராசரி 60.76.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி புனேயில் நடக்கவுள்ளது.
ஆஸ்திரேலிய அணி 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை பொறுமையிழக்கச் செய்து, கோபமூட்டி, கோப்பையைக் கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.
இந்தியத் துணைக்கண்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது ஆஸ்திரேலிய அணிக்கு கண்டிப்பாக சவாலானதாக இருக்கும். இந்தியா கடந்த 18 மாதங்களில் நிறைய டெஸ்ட் போட்டிகளில் வென்றிருக்கிறது. நிறைய போட்டிகள் சொந்த மண்ணிலேயே நடந்துள்ளன. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் அணியை அசாதாரணமான முறையில் வழிநடத்திச் சென்றிருக்கிறார். அவர் களத்தில் மிகவும் உணர்ச்சிகரமாக வீரர். ஆனால், தற்போது அந்த குணத்திலிருந்து சற்று மாறியிருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது விராத் கோலியை உணர்ச்சிவசப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிப்போம். பொறுமையிழக்கச் செய்து சற்று கோபமூட்டப் பார்ப்போம். இதைச் சரியாகச் செய்துவிட்டால் இந்தியாவுக்கு அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
விராத் கோலி 2016ஆம் ஆண்டில் மூன்று இரண்டை சதங்கள் அடித்திருக்கிறார். அத்துடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது டெஸ்ட் சராசரி 60.76.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி புனேயில் நடக்கவுள்ளது.