ஆப்நகரம்

AUS vs SL: குசல் பெரேரா அரைசதம்...: மீண்டும் இலங்கை மட்டமான ‘பேட்டிங்’... : ஆஸி.,க்கு 143 ரன்கள் இலக்கு...!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இலங்கை அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.

Samayam Tamil 1 Nov 2019, 3:17 pm
ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, ஏற்கனவே 2-0 என தொடரை கைப்பற்றியது.
Samayam Tamil Kusal Perera


சொதப்பல் துவக்கம்
இரு அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில், ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு, குசல் மெண்டிஸ் (13), டிக்வெலா (0) சொதப்பலான துவக்கம் அளித்தனர்.

குசல் பெரேரா அபாரம்
பின்வந்த குசல் பெரேரா (57) அரைசதம் அடித்து கைகொடுத்தார். அவிஸ்கா பெர்ணாண்டோ (20), ஒஷாடா பெர்ணாண்டோ (6) நிலைக்கவிலை. கடைசி நேரத்தில் ஷேகன் ஜெயசூர்யா (12), ராஜபக்‌ஷே (17*) ஆகியோர் ஓரளவு கைகொடுக்க, இலங்கை அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.


ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க், ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்