ஆப்நகரம்

வரதட்சணை கேட்டு ‘டார்ச்சர்’: வங்கதேச வீரர் மீது மனைவி புகார்!

வங்கதேச கிரிக்கெட் அணியின் மொஷாடிக் ஹொசைன் சைகாத் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டைவிட்டு வெளியே அனுப்பியதாக, அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 28 Aug 2018, 3:55 am
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் மொஷாடிக் ஹொசைன் சைகாத் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டைவிட்டு வெளியே அனுப்பியதாக, அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil 8


வங்கதேச கிரிக்கெட் அணியின் இளம் வீரர் மொஷாடிக் ஹொசைன் சைகாத், 22. இவர் வரும் செப்டம்பர் 13 -28 வரை யு.ஏ.இ.,யில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் 6 ஆண்டுகளுக்கு முன் தனது உறவினரான ஷார்மின் சமிராவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர் தன்னிடம் 12,000 அமெரிக்க டாலர்கள் அளவு வரதட்சனை கேட்டு பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தியதாகவும், தவிர வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் ஷார்மின் சமிரா புகார் அளித்துள்ளார்.

தவிர கடந்த 15ம் தேதி இவருக்கு ஷார்மின் சமிரா முறைப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் இதுவரை மொஷாடிக் ஹொசைன் சைகாத் தரப்பில் எந்த பதிலும் அனுப்பவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்