ஆப்நகரம்

ஐபிஎல் ஏலம்... தேதியை அறிவித்தது பிசிசிஐ!

ஐபிஎல் ஏலம் நடைபெறும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 Jan 2021, 4:30 pm
ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் இறுதி அல்லது மே மாத துவக்கத்தில் நடைபெறும் எனக் கருதப்படுகிறது. இதற்கான மினி ஏலம் பிப்ரவரி 18 அல்லது 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், 18ஆம் தேதியை இறுதி செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது.
Samayam Tamil bcci


இதுகுறித்து ட்விட்டரில் அறிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், “14ஆவது சீசனுக்குகான மினி ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும். ஏலத்தைக் காண நீங்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளீர்கள்?” எனப் பதிவிட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் பிப்ரவரி 5-9, 13-17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அடுத்த நாளில் ஏலம் நடைபெறும்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் ஐபிஎல் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது இங்கு நிலைமை சீராக உள்ளதால் இங்கிலாந்து அணி இந்தியச் சுற்றுப் பயணத்திற்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஐபிஎல் திருவிழா துவங்கும்.

அணிகள் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை ஜனவரி 20ஆம் தேதி விடுவித்தது. டிரேடிங் முறை பிப்ரவரி 4ஆம் தேதியுடன் முடிவடையும். ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஹர்பஜன் சிங், கிறிஸ் மோரிஸ் போன்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால், இவர்களை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.

8 அணிகளில் இருந்து மொத்தம் 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 139 பேர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 53.20 கோடி கைவசம் உள்ளது. ராயல் சேலஞ்சர் பெங்களூருவிடம் 35.90 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 34.85 கோடி கையிருப்பில் உள்ளது.

குறைந்தபட்சமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிடம் தலா 10.75 கோடி இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்