ஆப்நகரம்

ஜூனியர் உலகக் கோப்பை: டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசு

ஜூனியர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்குக் காரணமாக இருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசளிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Samayam Tamil 3 Feb 2018, 2:15 pm
ஜூனியர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்குக் காரணமாக இருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசளிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
Samayam Tamil bcci announces prize money for victorious india u19 team
ஜூனியர் உலகக் கோப்பை: டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசு


நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்தது.

அந்த அணி 47.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.



ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக மெர்லோ 76 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி பந்துவீச்சாளர்கள் இஷான், சிவா சிங், நாகர்கோட்டி மற்றும் அன்குல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சிவம் மவி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

எளியை இலக்கை விரட்டி களம் கண்ட இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 38.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இந்திய அணியின் தொடக்க வீரர் மன்ஜோத் கல்ரா (101*) அதிரடியாக ஆடி சதம் விளாசினார். ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச்சென்றார். தொடர் நாயகனாக இந்திய வீரர் சுப்மன் கில் தேர்வுசெய்யப்பட்டார்.



இதன் மூலம் ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் ஆறு முறை இறுதிப்போட்டிக்குச் சென்று, நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது.

இந்திய அணியை வழிநடத்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை கௌரவிக்கும் விதமாக ரூ.50 லட்சம் பரிசளிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களுக்கும் ரூ.30 லட்சம் பரிசும் அணியின் மற்ற அதிகாரிகளுக்கு ரூ.20 லட்சம் பரிசும் அளிக்கப்படும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்