ஆப்நகரம்

வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்க பிசிசிஐ ரெடி

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

Samayam Tamil 23 Jun 2018, 6:41 pm
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
Samayam Tamil DgXBBgkX4AEmpGt


பிசிசிஐ அமைப்பை தற்போது வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு நிர்வகித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஊதிய உயர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏ+ பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடி, பி பிரிவில் உள்ளவர்களுக்கு 3 கோடி மற்றும் சி பிரிவில் உள்ளவர்களுக்கு 1 கோடி ஆகிய முறைகளில் ஆண்டு ஊதியம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து சனிக்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. அப்போது வீரர்களுக்கான உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க நிர்வாகிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்க உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்