ஆப்நகரம்

டி20 உலகக் கோப்பை…இந்தியாவை விட்டு வெளியேற காரணம்…கங்குலி, ஜெய் ஷா விளக்கம்!

டி20 உலகக் கோப்பை இந்தியாவை விட்டு வெளியேறியதற்கான காரணம் குறித்து ஜெய் ஷா பேசியுள்ளார்.

Samayam Tamil 29 Jun 2021, 10:07 am
இந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கவுள்ள ஏழாவது டி20 உலகக் கோப்பை தொடர், இந்தியாவில்தான் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடமாறியுள்ளது. இதுகுறித்து கங்குலி நேற்று மாலை அறிவித்தார். இந்நிலையில் தற்போது பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil சவுரவ் கங்குலி, ஜெய் ஷா


அதில், டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டோம். இருப்பினும், கொரோனா அச்சம் காரணமாக இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கங்குலி, மற்றும் ஜெய் ஷா இருவரும் இதுதொடர்பாக மின்னஞ்சல் மூலம் விளக்கமளித்துள்ளனர்.

கங்குலி கருத்து:

“கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், டி20 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு நம்மைவிட்டு வெகுதூரம் விலகிச் செல்ல தொடங்கியது. அக்டோபர் மாத காலங்களில் மூன்று அலை தாக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுநர் தெரிவித்துள்ளனர். இதனால், வாய்ப்பு முற்றிலுமாக நம்மைவிட்டு நழுவிச் சென்றுவிட்டது. வீரர்களின் பாதுகாப்பு, ஒருங்கிணைப்பாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மே 29ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போதே, கொரோனா மூன்றாவது அலையைக் கருத்தில்கொண்டு தொடரை வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜெய் ஷா கருத்து:


“டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்த போதுமான முயற்சிகளை மேற்கொண்டோம். இதுதொடர்பாக ஐசிசியுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதியில் வீரர்கள் மற்றும் இத்தொடரின் நலனைக் கருத்தில்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் போட்டியை இடமாற்றம் முடிவு செய்தோம். இது சிறந்த முடிவு என நான் கருதுகிறேன். முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால், தொடரை இந்தியாவில் நடத்த முடியவில்லை” எனக் கூறினார்.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடர், வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் என்ன?

முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகள் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினி ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதும். இரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.

இரண்டாவது சுற்று:

ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் இரண்டாவது சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டது. முதல் சுற்றில் வெற்றிபெற்ற 4 அணிகளும் இந்த சுற்றில் பங்கேற்கும்.

அக்டோபர் 30ஆம் தேதி துவங்கும் இரண்டாவது சுற்றில் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறவுள்ளது. 12 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மைதானங்களில் விளையாடும். அதன்பிறகு மூன்று பிளே ஆஃப் சுற்று, இரண்டு அரையிறுதி, ஒரு பைனல் நடைபெறும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்