பிசிசிஐ 2019-23 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட வேண்டிய போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.
இந்திய அணி இலங்கை அணியுடனான தொடர் முடிந்த பின் அடுத்த இரண்டு நாட்களில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணி தொடர்ச்சியாக விளையாடி வருவதால் வெளிநாட்டு போட்டிகளுக்கு முறையாக தயாராக முடிவதில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால், வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு வழங்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுப்பப்பட்டது. இதனையடுத்து, பிசிசிஐ 2019-23 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி பங்கேற்க வேண்டிய போட்டிகளின் எண்ணிக்கையை 306 ஆக குறைத்துள்ளது. இது கடந்த 2015-19 ஆண்டில் 390 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தக் காலக்கட்டத்தில் 81 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் எனவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் உடன் டெஸ்ட் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி இலங்கை அணியுடனான தொடர் முடிந்த பின் அடுத்த இரண்டு நாட்களில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணி தொடர்ச்சியாக விளையாடி வருவதால் வெளிநாட்டு போட்டிகளுக்கு முறையாக தயாராக முடிவதில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால், வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு வழங்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுப்பப்பட்டது. இதனையடுத்து, பிசிசிஐ 2019-23 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி பங்கேற்க வேண்டிய போட்டிகளின் எண்ணிக்கையை 306 ஆக குறைத்துள்ளது. இது கடந்த 2015-19 ஆண்டில் 390 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தக் காலக்கட்டத்தில் 81 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் எனவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் உடன் டெஸ்ட் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.