ஆப்நகரம்

Ravi Shastri: ரவி சாஸ்திரிக்கு ஆப்பு! : புதிய பயிற்சியாளர் நியமிக்க விண்ணப்பம் கேட்கும் பிசிசிஐ

இந்திய அணி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில், பிசிசிஐ புதிய தலைமை பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

Samayam Tamil 16 Jul 2019, 3:21 pm
இந்திய அணி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில், அணியில் பல திடுக்கிடும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
Samayam Tamil Ravi Shastri Head Coach


உலகக் கோப்பை தொடரின் தோல்விக்கு பின் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்திய அணி ஏன் அரையிறுதியில் தோற்றது. தோனியை ஏன் 7வது இடத்தில் களமிறக்கினீர்கள் என பல்வேறு கேள்விகளை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேட்டது

தோனியை ஓரங்கட்ட புது பிளான் செய்த பிசிசிஐ!- இனி தோனி ஆடுவது சந்தேகம்!

புதிய தலைமை பயிற்சியாளர்:
இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய புதிய விண்ணப்பங்களை பிசிசிஐ கேட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடருக்காக 45 நாட்கள் பதவி நீட்டிப்பு பெற்றிருந்த ரவி சாஸ்திரி தற்போது பதவியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது. மீண்டும் அவர் தலைமை பயிற்சியாளருக்கான பதவியில் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற ரோகித் மற்றும் பும்ரா - கேப்டன் யார் தெரியுமா?

ரவி சாஸ்திரியுடன், பவுலிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் ஆகியோருக்கான இடத்திற்கும் புதிய நபர்கள் நியமிக்க வாய்ப்புள்ளது.
உலகக் கோப்பை இந்தியா வென்றிருந்தால் ஒருவேளை இவர்களின் பதவி நீட்டிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருந்தது.

இந்திய அணிக்கு இனி இரண்டு கேப்டன்கள்.. விராட் கோலி கேப்டன் காலத்தை முடிக்க நினைக்கும் பிசிசிஐ?

அணி மேலாளர்:
அணி மேலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் தமிழக அணி கேப்டனாக இருந்த சுனில் சுப்ரமணியன் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே போல் அணியின் உதவி ஊழியர்களுக்களின் பணி மட்டும் சில காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் செய்யும் இந்தியா 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.
தொடர்ந்து தென் ஆப்ரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வர உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்