ஆப்நகரம்

பி.சி.சி.ஐ.,க்கு இது போதாதுஅதிகாரிகளை அம்மணமா கட்டி வைத்து அடிக்கணும் !

பி.சி.சி.ஐ., அதிகாரிகளை கம்பத்தில் அம்மணமா கட்டிவைத்து அடிக்கவேண்டும் என முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கட்ஜூ, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 4 Oct 2016, 4:35 pm
புதுடில்லி: பி.சி.சி.ஐ., அதிகாரிகளை கம்பத்தில் அம்மணமா கட்டிவைத்து அடிக்கவேண்டும் என முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கட்ஜூ, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil bcci officials should be tied naked and lashed tweets justice katju
பி.சி.சி.ஐ.,க்கு இது போதாதுஅதிகாரிகளை அம்மணமா கட்டி வைத்து அடிக்கணும் !


இந்திய கிரிக்கெட்டில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என நீதிபதி லோதா தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. ஆனால் வெகுகாலமாக இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் பி.சி.சி.ஐ., ஏமாற்றி வந்தது. இதையடுத்து சமீபத்தில் லோதா குழுபரிந்துரைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என பி.சி.சி.ஐ.,க்கு உச்சநீதிமன்றம் உத்தவிட்டது.

இதையடுத்து லோதா குழு தயாரித்த அறிக்கையை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக சமீபத்தில் பி.சி.சி.ஐ., நிராகரித்தது. இதையடுத்து இருகுழுக்களும் மோதல் அதிகரித்தது. இந்நிலையில் பி.சி.சி.ஐ., யின் நிதிகளை முடக்கும் படி லோதா குழு வங்கிகளுக்கு உத்தவிட்டதாக தெரிகிறது. ஆனால் இதை லோதா குழு மறுத்துள்ளது.

This treatment isnt enough. Aisan na manahin. Lodha shud get BCCI officials tied naked to a pole & given 100 lashes each on their behinds — Markandey Katju (@mkatju) 4 October 2016 இந்நிலையில் இதுகுறித்து லோதாகுழுவில் இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜூ தெரிவித்துள்ள டுவிட்டர் கருத்தில், இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) இதெல்லாம் பத்தாது. பி.சி.சி.ஐ., அதிகாரிகளை கம்பத்தில் அம்மணமாக கட்டி, ஒவ்வொருத்தர் பின்னாலும் 100 அடிகள் அடிக்க வேண்டும்,’ என அதில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்