ஆப்நகரம்

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சட்ட ஆணையம் செக்!

பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தேசியமாக்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Samayam Tamil 19 Apr 2018, 2:54 am
பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தேசியமாக்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
Samayam Tamil bcci


124 பக்கங்கள் கொண்ட இந்த பரிந்துரை கடிதத்தை நீதிபதி பி.எஸ். செளகான் தலைமையில் சட்ட ஆணையம் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையில், அரசியலமைப்பு போல், பிசிசிஐ செயல்பட்டாலும், எந்தவிதமான கண்காணிப்புக்கு உட்படாமல் செயல்படுகிறது என்றும், இதன் காரணமாக அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 12 இன் படி, பிசிசிஐ வாரியத்தை அரசு அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்ற விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் ஆர்.டி.ஐ இன் கீழ் வரும் நிலையில், கிரிக்கெட் வாரியம் மட்டும் தனித்து செயல்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய சட்ட ஆணையம், இவ்வாறு தனித்து செயல்பட்டால், வீரர்கள் தேர்வு உட்பட பலவற்றில் நடக்கும் முறைகேடுகளை வெளிக்கொணர முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து கிரிக்கெட் வாரியங்களையும் கட்டுப்படுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 1928 ம் ஆண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்