ஆப்நகரம்

‘கொரோனாவுக்கு எதிரான மேட்ச்’ களமிறங்கியது பிசிசிஐ…நாடு முழுவதும் உதவ திட்டம்!

கொரோனாவுக்கு எதிரான போரில் பிசிசிஐயும் இணைந்துள்ளது.

Samayam Tamil 24 May 2021, 3:08 pm
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் இந்தியா பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்தைக் கண்டு வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆக்ஸிசன் வசதி, படுக்கை வசதி கிடைக்காமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil பிசிசிஐ


இதனால் சில நல்ல உள்ளம் படைத்த அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மக்களுக்கு உதவி செய்யப் பெரிய அளவில் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிசிசிஐ மட்டும் எந்த உதவி செய்யாமல் மௌனம் காத்து வந்தது. இதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு எதிரான போரில் பிசிசிஐயும் களமிறங்கியுள்ளது.

பிசிசிஐ அறிக்கை:

இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ சார்பில் 10 லிட்டர் கொண்ட 2000 ஆக்ஸிசன் செரிவூட்டிகள் நன்கொடையாக வழங்கப்படும்.. நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இதனை கொண்டு சேர்ப்போம் எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “கொரோனாவு கட்டுப்படுத்த மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். முடிந்த அனைத்தையும் மக்களுக்கு செய்கின்றார்கள். பிசிசிஐயும் ஆரோக்கியம், பாதுகாப்பு இரண்டிற்கும் முதன்மையான முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. பிசிசிஐ சார்பில் ஆக்ஸிசன் செரிவூட்டிகள் உடனடியாக வழங்கப்படும்” எனக் கூறினார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், “கொரோனாவுக்கு எதிரான போரில் நாங்களும் துணையாக நிற்க விரும்புகிறோம். தற்போது ஆக்ஸிசன் மற்றும் இதர உபகரணங்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால், ஆக்ஸிசன் செரிவூட்டிகளை வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என நம்புகிறேன். தற்போதைய நிலையில் தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான சிறந்த ஆயுதம். அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்துப் பேசிய பிசிசிஐ பொருளாளர் அருண் சிங், தற்போது பிசிசிஐ சார்பில் வழங்கப்படவுள்ள ஆக்ஸிசன் செரிவூட்டிகள் மூலம் மக்கள் அதிகளவில் பயனடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்