எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்…இதுதான் அட்டவணை: முதல் போட்டி வெள்ளிக் கிழமை?
எஞ்சிய ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை தொடர்பாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 5 Jun 2021, 1:38 pm
ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போதுவரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. எஞ்சிய 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் அமீரதக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் துவங்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவலில் செப்டம்பர் 18 அல்லது 19ஆம் தேதி போட்டிகள் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதிப் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் போட்டிகள் மொத்தம் 25 நாட்கள்வரை நீடிக்கும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மேலும் அங்கு 70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து பிசிசிஐயும், அமீரக கிரிக்கெட் வாரியமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 30 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா போன்றவர்கள் அமீரகம் சென்றடைந்துள்ளனர். மேலும் சில நிர்வாகிகள் மூன்று நாட்களுக்குள் அமீரகம் செல்லவுள்ளனர். ஐபிஎல்லை நடத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பிசிசிஐ, உள்ளூர் கிரிக்கெட் தொடர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் கண்டனங்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமீரதக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் துவங்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவலில் செப்டம்பர் 18 அல்லது 19ஆம் தேதி போட்டிகள் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதிப் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் போட்டிகள் மொத்தம் 25 நாட்கள்வரை நீடிக்கும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மேலும் அங்கு 70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து பிசிசிஐயும், அமீரக கிரிக்கெட் வாரியமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 30 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா போன்றவர்கள் அமீரகம் சென்றடைந்துள்ளனர். மேலும் சில நிர்வாகிகள் மூன்று நாட்களுக்குள் அமீரகம் செல்லவுள்ளனர். ஐபிஎல்லை நடத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பிசிசிஐ, உள்ளூர் கிரிக்கெட் தொடர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் கண்டனங்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.