ஆப்நகரம்

413* ரன்களை குவித்து மீண்டும் இந்திய வீரர் சாதனை

மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கஜ் சாவ் 413 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் சாதனை படைத்துள்ளார்.

TOI Sports 26 Dec 2016, 12:09 pm
கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கஜ் சாவ் 413 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் சாதனை படைத்துள்ளார்.
Samayam Tamil bengal batsman scores 413 in club tournament
413* ரன்களை குவித்து மீண்டும் இந்திய வீரர் சாதனை


மேற்கு வங்கத்தில் CAB league (Cricket Association of Bengal) எனும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இந்த போட்டி 3 நாட்கள் நடைப்பெறும் டெஸ்ட் போட்டியாகும். இதில் பாரிஸா அணிக்காக பங்கஜ் சாவ் என்ற 28 வயதான வீரர் 44 பவுண்டரிகள், 23 சிக்ஸர்கள் விளாசி 413 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

பங்கஜ் சாவ் விளையாடிய பாரிஸா அணி 192 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து 4வது வீரராக களமிறங்கிய பங்கஜ் சாவ் 413 ரன்களை குவித்துள்ளார். பங்கஜ் சாவின் சிறப்பான ரன் குவிப்பால் பாரிஸா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 708 ரன்கள் சேர்த்தது.



தொடர்ந்து களமிறங்கிய தக்‌ஷின் கொல்கத்தா சன்சாத் அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பங்கஜ் சாவ் கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக ரஞ்சி அணியில் அறிமுக வீரராக பங்கேற்றார். கல்கத்தா அணிக்காக முக்கிய டி20 போட்டிகளில் விளையாயுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்