ஆப்நகரம்

அந்நியன் என்ற டிண்டாவுக்கு அடி.. உதை...!

பெங்கால் அணி வீரர்களான டிண்டா, ஓஜா ஆகியோர் மைதானத்திலேயே கட்டிபுரண்டு சண்டை போட்ட விஷயம் சர்சையை கிளப்பியுள்ளது.

TOI Sports 13 Nov 2016, 3:03 pm
பெங்கால் அணி வீரர்களான டிண்டா, ஓஜா ஆகியோர் மைதானத்திலேயே கட்டிபுரண்டு சண்டை போட்ட விஷயம் சர்சையை கிளப்பியுள்ளது.
Samayam Tamil bengal teammates pragyan ojha ashok dinda in ugly fight ahead of ranji trophy match
அந்நியன் என்ற டிண்டாவுக்கு அடி.. உதை...!


இந்தியாவில், உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் ராஜ்கோட்டில் நடக்கும் இன்றைய லீக் போட்டியில், பெங்கால், தமிழ்நாடு அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி துவங்கும் முன், பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பெங்கால் வீரர்களான டிண்டா, பிரக்யான் ஓஜாவுக்கு இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை டிண்டா தான் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இது வேகமாக முத்தி, கைகலப்பாக மாறிவிட, உடன் இருந்த வீரர்கள் அவரளை தடுத்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பி.டி.ஐ., தகவல் வெளியிட்டுள்ள செய்தியில்,’ ஓஜா மிகவும் சாதுவானவர். டிண்டா தான் இந்த சர்ச்சையை கிளப்பியுள்ளார். சண்டையின் போது ஓஜா காதில் சென்று டிண்டா நீ ஒரு அந்நியன் என சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓஜா, டிண்டாவை பிடித்து தள்ளிவிட்டு அடிக்க முற்பட்டுள்ளார். இதை கவனித்த சக வீரர்கள் உடனே ஓடிவந்து விலக்கிவிட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி கூறுகையில்,’ நடந்ததை பற்றி சிந்திக்காமல், இருவீரர்களும் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும்.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்