ஆப்நகரம்

‘ஒத்துழைப்பு கிடையாது’ கப்சிப் என இருந்த பிசிசிஐ…கோலி பதவி விலகக் காரணம்? தேர்வாளர் ஓபன் டாக்!

விராட் கோலிக்கும், பிசிசிஐக்கும் இடையில் பிரச்சினை இருந்தது உறுதியாகியுள்ளது.

Samayam Tamil 20 Sep 2021, 3:24 pm
இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் விராட் கோலி, இதுவரை ஒரு உலகக் கோப்பையைக் கூட வென்றுகொடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, கடந்த இரண்டு வருடங்களாகவே சதமடிக்காமல் இருந்து வருகிறார். இதுகுறித்து கோலியை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Samayam Tamil விராட் கோலி


அழுத்தம் காரணமா?

மூன்றுவிதமான இந்திய அணிக்கும் கோலி கேப்டனாக இருப்பதால், அவரால் அழுத்தங்களைச் சமாளித்து பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால்தான், அவரால் சதமடிக்க முடியவில்லை என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இதனால், அக்டோபர் மாதம் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பையை வென்றுகொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். ஒருவேளை, இதிலும் கோப்பை வெல்லவில்லை என்றால் ஒருநாள், டி20 அணிக்கான கேப்டன் பதவியை இவர் இழப்பார் எனக் கூறப்பட்டது.

IPL Play-off: இந்த சீனியர் வீரர்களுக்கு ஓய்வு? பிசிசிஐ ‘ரகசிய மீட்டிங்’: திடீர் முடிவால் அணிகள் ஷாக்!

கோலி அறிவிப்பு:

இந்நிலையில், கோலியே தாமாக முன்வந்து, டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கேப்டன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன் என அறிவித்தார். இதுகுறித்து இன்ஸ்டா பதிவு வெளியிட்ட இவர், ““நான் கடந்த 5-6 வருடங்களாக இந்தியாவின் 3 வடிவ கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டனாக இருந்து வருகிறேன். பணிச்சுமையை கருத்தில்கொள்ள வேண்டியது முக்கியமான ஒன்று. மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தொடருவேன்” என தெரிவித்தார்.

காரணம் என்ன?

இருப்பினும், கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கு சதம் அடிக்காமல் இருப்பது காரணமல்ல. பிசிசிஐயுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததுதான் காரணம் என தகவல்கள் கசிய துவங்கியது. கோலி, அழுத்தம் காரணமாக வீரர்களைத் திட்டுவது, பயிற்சியன்போது கோச் செல்வதை உதாசினப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், இது குறித்து பிசிசிஐ கூட்டத்தின்போது கேட்டபோது, கோலி கோபமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகுதான், டி20 உலகக் கோப்பைக்கு இளம் வீரர்களின் பதற்றத்தைத் தனிக்க முன்னாள் கேப்டன் தோனியை ஆலோசகராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் அணித் தேர்வாளர் சந்திப் படேல் பேசியுள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த அவர், “விராட் கோலிக்கும், பிசிசிஐக்கும் அந்த அளவுக்கு ஒத்துப் போகவில்லை. இன்னும் சொல்லப் போனால், இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை என்பது முன்புபோல் இருக்கவில்லை. இதுவே, விராட் கோலி ராஜினாமா செய்ய முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “விராட் கோலி ராஜினாமா செய்ததை நான் 100 சதவீதம் வரவேற்பேன். அவர் 2019ஆம் ஆண்டுமுதல் சதமடிக்காமல் இருந்து வருகிறார். தற்போது கேப்டன் பதவியிலிருந்து வெளி வந்துள்ளதால், நிச்சயம் பேட்டிங்கில் கவனம் செலுத்தி அதிரடி காட்டுவார் என நம்புகிறேன்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்