ஆப்நகரம்

நானே ஹீரோ, நானே வில்லன் : விஸ்வரூபம் கமல் மாதிரியான பிபுல்!

புனே அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், முதலில் ஹிரோவாக ஜொலித்த, பிபுல் சர்மா, சில நிமிடங்களில் வில்லான மாறினார்.

TOI Sports 6 May 2017, 4:28 pm
ஐதராபாத்: புனே அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், முதலில் ஹிரோவாக ஜொலித்த, பிபுல் சர்மா, சில நிமிடங்களில் வில்லான மாறினார்.
Samayam Tamil bipul sharma turns hero to villan
நானே ஹீரோ, நானே வில்லன் : விஸ்வரூபம் கமல் மாதிரியான பிபுல்!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் ஐதராபாத்தில் நடக்கும் 44வது லீக் போட்டியில், ஐதராபாத், புனே அணிகள் மோதுகின்றன.

இதில் ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதில் ஐதராபாத் அணியில், நெஹ்ரா, பிபுல் சர்மா அணிக்கு திரும்பினர். புனே அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இதையடுத்து களமிறங்கிய புனே அணிக்கு, திருப்பதியை (1) தனது சூப்பர் பீல்டிங் மூலமாக பிபுல் சர்மா ரன் அவுட்டாக்கினார். தொடர்ந்து பீல்டிங்கிலும் பட்டையை கிளப்பினார் பிபுல் சர்மா. ஆனால் இப்படி அசத்திய இவர் புனே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 5 ரன்கள் எடுத்த போது கொடுத்த சுலப கேட்ச் வாய்ப்பை, கோட்டைவிட்டார்.

இதனால் முதலில் ஹீரோவாக ஜொலித்த பிபுல், கொஞ்ச நேரத்தில் வில்லனாக திகழ்ந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்