ஆப்நகரம்

அண்ணன் இறந்ததாக போலி செய்தி வெளியிட்டவனை பழிவாங்கத் துடிக்கும் மெக்கலம்!!

நேதன் மெக்கலம் இறந்துவிட்டதாக பொய் செய்தி பரப்பியவரை கண்டுபிடிக்க பிராண்டன் மெக்கலம் உறுதிகொண்டுள்ளார்.

Samayam Tamil 2 Dec 2018, 2:53 pm
நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராண்டன் மெக்கலம், சமூக வலைத்தளங்களில் தனது அண்ணன் நேதன் மெக்கலம் இறந்துவிட்டதாக பொய் செய்தி பரப்பியவரை கண்டுபிடிக்க உறுதிகொண்டுள்ளார்.
Samayam Tamil அண்ணன் இறந்ததாக போலி செய்தி வெளியிட்டவனை பழிவாங்கத் துடிக்கும் மெக்கலம்!!
அண்ணன் இறந்ததாக போலி செய்தி வெளியிட்டவனை பழிவாங்கத் துடிக்கும் மெக்கலம்!!


நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பிராண்டன் மெக்கலம், கடந்த 2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில், இவரின் அண்ணனும் சக நியூசிலாந்து வீரருமான நேதன் மெக்கலம் இறந்துவிட்டதாக, சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி பரவியுள்ளது. இதையடுத்து, நேதன் மெக்கலம் தனக்கு எதுவும் ஆகவில்லை எனவும், தான் நல்ல உடல்நலத்துடனும் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, பிராண்டன் மெக்கலம் இந்த பொய் செய்தியைப் பரப்பியவரை கண்டுபிடிக்க உருதிகொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று இரவு யாரோ எனது சகோதரர் இறந்துவிட்டதாக சமூக வலைததளங்களில் பரப்பி இருக்கிறார். எனது மனம் உடைந்துவிட்டது, நான் இப்போது நியூசிலாந்து திரும்பிக் கொண்டு இருக்கிறேன். அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது. யார் இதை செய்திருந்தாலும், நான் உன்னை கண்டுபிடிப்பேன். எங்கிருந்தாலும், எப்படியானாலும்,” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்