ஆப்நகரம்

முரளி விஜய்யால் இஷாந்த் சர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்!

காயம் காரணமாக விலகிய முரளி விஜய்க்கு பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அணியில் இடம் பெறுவார் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தெரிவித்துள்ளது.

TOI Sports 4 Apr 2017, 6:14 pm
காயம் காரணமாக விலகிய முரளி விஜய்க்கு பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அணியில் இடம் பெறுவார் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தெரிவித்துள்ளது.
Samayam Tamil breaking ishant picked up by kxip after going unsold at the ipl2017 auction
முரளி விஜய்யால் இஷாந்த் சர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்!


இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் டி-20 தொடரான ஐ.பி.எல்., தொடர், இந்த ஆண்டுக்கான தொடர் நாளை துவங்குகிறது. இதில் காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, டிவிலியர்ஸ், ராகுல், முரளி விஜய், அஷ்வின், குயிண்டன் டி காக், டுமினி என அடுத்தடுத்து விலகினர்.

இந்நிலையில் பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த முரளி விஜய் விலகியதால், அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு பஞ்சாப் அணி நிர்வாகம் தள்ளப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த 10வது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. தற்போது, முரளி விஜய்க்கு பதிலாக இஷாந்த் சர்மா போட்டிகளில் பங்கேற்பார் என பஞ்சாப் அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING Ishant picked up by kxip after going unsold at the #IPL2017 auction

அடுத்த செய்தி

டிரெண்டிங்