ஆப்நகரம்

சச்சினை யாரும் கண்டுக்கவே இல்ல: மந்தனா

எதிர்கால இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் சச்சின் டெண்டுல்கரை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தெரிவித்துள்ளார்.

TNN 16 Sep 2017, 7:34 pm
எதிர்கால இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் சச்சின் டெண்டுல்கரை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil budding women cricketers will look up to mithali and not sachin mandhana
சச்சினை யாரும் கண்டுக்கவே இல்ல: மந்தனா


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி, நூலிழையில் கோப்பையை இழந்தது.

இருப்பினும் இந்திய வீராங்கனைகள் அனைவரும் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டனர்.



இந்நிலையில் இந்த உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, எதிர்காலத்தில் விளையாட வரும் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் சச்சின் டெண்டுல்கரை முன்னுதாரணமாகக் கருதப்போவதில்லை. அவர்கள், தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள மிதாலி ராஜை தங்கள் முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறுவார்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும், மகளிருக்கான ஐபிஎல் தொடர் பற்றி கருத்து தெரிவித்த அவர் மந்தனா, மகளிருக்கான ஐபிஎல் வரவேற்கத்தக்கது. அப்படி ஒரு தொடர் நடைபெற்றால் மேலும் பல பெண்கள் கிரிக்கெட் விளையாட முன்வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்