ஆப்நகரம்

பண்ண பாவத்துக்கு பரிகாரம் தேடிய பும்ரா!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில், நோ-பாலில் விக்கெட் வீழ்த்திய இந்திய பும்ரா, அதற்கு பரிகாரமாக இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை பெற்றுத்தந்தார்.

TOI Sports 18 Jun 2017, 4:52 pm
Samayam Tamil bumrah run outs azhar ali against pakistan
பண்ண பாவத்துக்கு பரிகாரம் தேடிய பும்ரா!
லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில், நோ-பாலில் விக்கெட் வீழ்த்திய இந்திய பும்ரா, அதற்கு பரிகாரமாக இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை பெற்றுத்தந்தார்,

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லண்டனில் நடக்கும் இன்றைய பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, துவக்க வீரர் பஹார், பும்ரா வீசிய போட்டியின் 4வது ஓவரின் முதல் பாலில் அவுட்டானார். ஆனால், அம்பயர் சோதித்ததில் இது நோ-பால் என தெரியவர, வெளியேறிய பஹார், மீண்டும் களத்திற்கு திரும்பினார். இதனால், கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதற்கு பரிகாரமாக, அசார் அலியை ரன் அவுட்டாக்கி, பும்ரா பரிகாரம் தேடினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்