ஆப்நகரம்

கவுஹாத்தியில் கலக்கலாக துவங்குமா இந்தியா: இலங்கையுடன் இன்று முதல் மோதல்!

கவுஹாத்தி: இந்தியா இலங்கை அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி கவுஹாத்தியில் இன்று துவங்குகிறது.

Samayam Tamil 5 Jan 2020, 11:29 am
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி இன்று கவுஹாத்தியில் துவங்குகிறது. இதில் இந்திய அணி வெற்றியுடன் இந்த தொடரை துவங்கும் என நம்பப்படுகிறது.
Samayam Tamil Virat Kohli


ரோஹித் இல்லை
இந்திய துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா விருப்ப ஓய்வில் உள்ளார். முகம்மது ஷமிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நீண்ட இடைவேளைக்கு பின் துவக்க வீரர் ஷிகர் தவன், வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் தவன் கண்டிப்பாக சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

கோலி பலம்
மிடில் ஆர்டரில் கோலி தனது அசத்தல் பார்மை தொடர்ந்தால் நல்லது. அடுத்து வரும் ஸ்ரேயாஸ் ஓரளவு கைகொடுக்கிறார். பின்வரும் இளம் ரிஷப் பந்த், உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்க தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பும்ரா வருகை
பவுலிங்கில் யார்க்கர் கிங் பும்ராவின் வருகை இந்திய அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. ஆனால் உலகக்கோப்பை வரை இவர் மீண்டும் காயமடையாமல் இருக்க வேண்டிய அவசியம். இவருடன் சாய்னி, ஷார்துல் தாகூர் கைகொடுக்க முயற்சிக்க வேண்டும்.


மாத்யூஸ் நம்பிக்கை
இலங்கை அணியை பொறுத்தவரையில் அனுபவ வீரர் மாத்யூஸின் வருகை நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது. குசல் பெரேரா பேட்டிங்கில் அதிக நம்பிக்கை அளிக்கிறார். பாகிஸ்தானில் டி–20 தொடரை (3–0) வென்ற உற்சாகத்தில் இலங்கை அணி களமிறங்குகிறது. பவுலிங்கில் அந்த அணி பெரும்பாலும் கேப்டன் மலிங்காவையே நம்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்