லண்டன்: இந்திய பயிற்சியாளர் கும்ளேவை நீக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என இந்திய கிரிக்கெட் போர்டு ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களான கங்குலி, சச்சின், லட்சுமண் ஆகியோர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் இந்திய அணி பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் பங்கேற்க தயாரானது. இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க, பயிற்சியாளர் கும்ளே, இந்திய கேப்டன் விராட் கோலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாளுக்கு நாள் பெரிதான இவர்களின் கருத்து சண்டையால், அணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்திய அணி வீரர்களும், கேப்டன் கோலிக்கே ஆதரவு குரல் தெரிவிக்க, பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் அவர்களை சமாதானம் செய்ய, இந்திய ஆலோசனை கமிட்டியின் கங்குலி சண்டை குறித்த நிலையை நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து அவரை நீக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என பிசிசிஐ.,யின் ஆலோசனை கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ., இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ பிசிசிஐ., ஆலோசனைக்குழு மற்றும், பிசிசிஐ., அதிகாரிகளும் இன்று சந்தித்தனர். அதில் இந்திய சீனியர் அணியின் தலைமைப்பயிற்சியாளர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் ஆலோசனைக்குழுவினர், மேலும் அவகாசம் தேவைப்படுவதாகவும், சரியான நேரத்தில் இதுகுறித்து பிசிசிஐ.,க்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.அதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னும் சில காலம் கும்ளேவே பயிற்சியாளராக தொடர வாய்ப்பு உள்ளது. ’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
LONDON: The Cricket Advisory Committee (CAC) comprising Sachin Tendulkar, Sourav Ganguly and VVS Laxman has sought more time to decide on chief coach Anil Kumble's future.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் இந்திய அணி பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் பங்கேற்க தயாரானது. இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க, பயிற்சியாளர் கும்ளே, இந்திய கேப்டன் விராட் கோலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாளுக்கு நாள் பெரிதான இவர்களின் கருத்து சண்டையால், அணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்திய அணி வீரர்களும், கேப்டன் கோலிக்கே ஆதரவு குரல் தெரிவிக்க, பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் அவர்களை சமாதானம் செய்ய, இந்திய ஆலோசனை கமிட்டியின் கங்குலி சண்டை குறித்த நிலையை நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து அவரை நீக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என பிசிசிஐ.,யின் ஆலோசனை கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ., இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ பிசிசிஐ., ஆலோசனைக்குழு மற்றும், பிசிசிஐ., அதிகாரிகளும் இன்று சந்தித்தனர். அதில் இந்திய சீனியர் அணியின் தலைமைப்பயிற்சியாளர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் ஆலோசனைக்குழுவினர், மேலும் அவகாசம் தேவைப்படுவதாகவும், சரியான நேரத்தில் இதுகுறித்து பிசிசிஐ.,க்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.அதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னும் சில காலம் கும்ளேவே பயிற்சியாளராக தொடர வாய்ப்பு உள்ளது. ’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
LONDON: The Cricket Advisory Committee (CAC) comprising Sachin Tendulkar, Sourav Ganguly and VVS Laxman has sought more time to decide on chief coach Anil Kumble's future.