ஆப்நகரம்

பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் விளையாட முடியாது - பிசிசிஐக்கு கங்குலி ஆதரவு

பாகிஸ்தானுடன் இனி இந்தியா கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்போவது இல்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எடுத்துள்ள முடிவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

TNN 25 Sep 2016, 1:27 pm
புதுடெல்லி: பாகிஸ்தானுடன் இனி இந்தியா கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்போவது இல்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எடுத்துள்ள முடிவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil cant play with pakistan till they stop cross border terrorism sourav ganguly
பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் விளையாட முடியாது - பிசிசிஐக்கு கங்குலி ஆதரவு



இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் நாட்டுடன் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் கூறியிருந்தார். அன்ராக் தாகூரின் கருத்துக்கு ஆதரவு அளிப்பதாக சவுரவ் கங்குலி தெரிவித்ததாவது:
பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், இந்திய எல்லையை தாண்டி பல அட்டூழியங்களை செய்து வருகிறது. இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பாகிஸ்தான் அணியுடன் நேரடியாக எந்த தொடரிலும் பங்கேற்காமல் இந்திய அணி தவிர்த்து வருகிறது. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என சிலரின் விருப்பமாக உள்ளது. இருப்பினும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது தற்போது சாத்தியமில்லாத விஷயம் என தெரிவித்துள்ளார்.

அனுராக் கருத்துக்கு பாகிஸ்தான் வீரர் முkஅமது யூசப் கண்டனம் தெரிவித்து பேசுகையில், “அனுராக் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக எங்களுடன் நேரடியாக தொடர்களில் பங்கேற்காமல் இந்தியா தவிர்த்து வருகிறது. இரு நட்டு உறவில் சுமூகமாக இருந்த காலத்தில் கூட தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவித்தது. கிரிக்கெட் வாரியம் விளையாட்டு வாரியமா அல்லது அரசியலுக்கான இடமா?. அனுராக் பிசிசிஐ தலைவராக பேசுகிறாரா? அல்லது அவர் பாஜக கட்சி தலைவராக பேசுகிறாரா? என்று தெரியவில்லை” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்