ஆப்நகரம்

தமிழக கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்!

தமிழகத்தைச் சேர்ந்த லீக் கிரிக்கெட் வீரர் பிரபாகரன் கார் விபத்தில் இறந்தார்.

Samayam Tamil 16 Jan 2018, 3:07 pm
தமிழகத்தைச் சேர்ந்த லீக் கிரிக்கெட் வீரர் பிரபாகரன் கார் விபத்தில் இறந்தார்.
Samayam Tamil cars carrying league cricketers fall off bridge after collision in tn one dies
தமிழக கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்!


தமிழக லீக் போட்டிகளில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் டி.பிரபாகரன். தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் நாமக்கல் மாவட்டம் பிரமாதி வேலூரில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்கச் சென்றார். போட்டி முடிந்ததும் அவர் சக வீரர்களுன் நாமக்கல்லில் அவர்கள் தங்கியிருந்த தங்கும் விடுதி ஒன்றுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அவர்கள் இரு கார்களில் சேலம் மதுரை நெடுஞ்சாலை வழியாக கந்தம்பாளையம் அருகே சென்றபோது, சாலையைக் கடந்த ஒரு பெண் மீது மோதாமல் இருக்க முன்னால் சென்ற காரின் ஓட்டுநர் பிரேக் போட்டிருக்கிறார். அப்போது பின்னால் அந்த காரைத் தொடர்ந்து வந்த இரண்டாவது கார் அந்த கார் மீது மோதி இரண்டு கார்களும் பாலத்திலிருந்து கீழே விழுந்தன.

இதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் பலத்த காயமனைந்த நிலையில் சேலம் மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு கார்களையும் ஓட்டிவந்தவர்கள் வேகமாகக் காரை ஓட்டியதால் விபத்து நேர்ந்துள்ளது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இது குறித்து நல்லூர் கந்தம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்