ஆப்நகரம்

சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்ட ரெய்னா, ரிஷப் பண்ட்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட 5 வீரர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுள்ளனர்.

TOI Sports 8 May 2017, 2:15 pm
புதுடெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட 5 வீரர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுள்ளனர்.
Samayam Tamil championstrophy2017 rishabh pant suresh raina put on standby
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்ட ரெய்னா, ரிஷப் பண்ட்!


இங்கிலாந்தில் வரும் ஜூன் 1 முதல் 18ம் தேதி வரை நடைப்பெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பதில் பல இழுபறி நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த பிசிசிஐ சிறப்புக் கூட்டம் நடந்தது. இன்று 15 பேர் அடங்கிய இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதோடு ரெய்னா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வீரர்கள் காத்திருப்பு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி விபரம்:
விராட் கோலி (கேப்டன்), சிகர் தவான், ரோகித் சர்மா, ரஹானே, தோனி (கீப்பர்), யுவராஜ், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சமி, புவனேஸ்வர் குமார், பும்ரா, மணீஸ் பாண்டே

காத்திருக்கும் வீரர்கள் பட்டியல்:
சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், சர்துல் தாகூர், தினேஷ் கார்த்திக் ஆகிய 5 வீரர்கள் காத்திருக்கும் பட்டியல் இடம்பெற்றுள்ளனர்.

சில மாதங்களாக ஒரு நாள் போட்டி மட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டியில் சிகர் தவான் சரியாக சோபிக்காத நிலையில் அவருக்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அதிரடி காட்டும் சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட் காத்திருப்பு பட்டியலில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்