ஆப்நகரம்

இளம் வீரர்களுக்கு தமிழ்நாடு பிரிமியர் லீக் சிறந்த வாய்ப்பு: ஷேவாக்

தமிழ்நாடு பிரிமியர் லீக் இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்த சிறந்த அடித்தளமாக அமையும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் விரேந்திரஷேவாக் தெரிவித்துள்ளார்.

TNN 10 Aug 2016, 6:52 pm
சென்னை: தமிழ்நாடு பிரிமியர் லீக் இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்த சிறந்த அடித்தளமாக அமையும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொட க்க ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil chance for youngsters in tnpl says sehwag
இளம் வீரர்களுக்கு தமிழ்நாடு பிரிமியர் லீக் சிறந்த வாய்ப்பு: ஷேவாக்


சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் பங்கேற்கும் எட்டு அணிகளின் ஒன்றான மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சின்னம் மற்றும் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சின்னத்தை ஷேவாக் அறிமுகம் செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் விளையாடும் வீரர்கள் முதல்தர போட்டி அல்லது இந்திய அணிக்கு கூட விளையாடலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்