ஆப்நகரம்

CSK Team 2019 Players: மோகித் சர்மாவை 5கோடிக்கு ஏலத்தில் எடுத்த சென்னை அணி : லைவ் அப்டேட்

CSK Team Squad 2019: இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது ஐபிஎல் போட்டிகள். 2019 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று நடக்க உள்ளது.

Samayam Tamil 18 Dec 2018, 6:13 pm
ஜெய்பூர் : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது ஐபிஎல் போட்டிகள். 2019 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று நடக்க உள்ளது.
Samayam Tamil CSK Team


இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 2018 சாம்பியனான தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் 2 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஏற்கனவே மொத்தம் 23 வீரர்கள் சென்னை அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்னும் இரண்டே இரண்டு இந்திய வீரர்கள் மட்டும் சென்னை அணியில் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.

முதல் கட்டமாக மோகித் சர்மாவை எடுக்கப்பட்ட சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இன்னும் ஒரு வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டி உள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்கள், எத்தனை கோடிக்கு எடுக்க உள்ளனர் தெரியுமா?


ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் -Live Update



எத்தனை கோடி?
வீரர்களை ஏலத்தில் எடுக்க சென்னை அணியிடம் இன்னும் 8.4 கோடி தொகை உள்ளன. இதை வைத்து இரண்டு இந்திய வீரர்கள் எடுக்க உள்ளனர்.

மோகித் சர்மா:
சென்னை அணியில் மோகித் சர்மா 5 கோடியில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.


யுவராஜ் சிங் வாய்ப்பு:சென்னை அணியில் யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்றைய ஏலத்தில் யுவராஜ் சிங் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்