ஆப்நகரம்

புயலால் உடைந்த சென்னை கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் 5வது டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது.

TOI Sports 16 Dec 2016, 3:09 pm
சென்னை : இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் 5வது டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது.
Samayam Tamil chennai test as scheduled despite cyclone vardah
புயலால் உடைந்த சென்னை கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டி


முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் 5வது டெஸ்ட் போட்டி நடத்துவதா, அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதா என்ற குழப்பம் நிலவியது. இந்த பிரச்னை ஒரு புறம் போய் கொண்டிருந்த வேலையை அடுத்த சில தினங்களில் வர்தா புயல் சென்னையை புரட்டி எடுத்தது.



வர்தா புயலால், கனமழை, சூறாவளி காற்று வீசி மரங்கள், மின்கம்பங்களை சாயத்தது. இதனால் சென்னையில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் அதிகரித்தது. வர்தா புயலின் போது, மரக்கிளைகள் விழுந்ததால், ரசிகர்கள் அமரும் பகுதியில் நிழலுக்காக இருக்கும் பகுதிகள் சில இடங்கள் சேதமடைந்திருந்தது.



பல்வேறு குழப்பங்களுக்கு இடையே இன்று இந்தியா - இங்கிலாந்து பங்கேற்கும் 5வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்