சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவை நோக்கி நகர்கிறது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து 477 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அபாரமாக 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 199 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின், கருண் நாயர் படிப்படியாக அதிரடிக்கு மாறினார். அபாரமாக ஆடிய அவர் அடுத்தடுத்து சாதனைகளைத் தன்வசமாக்கி முச்சதம் விளாசினார். அவருக்குத் துணையாக, அஸ்வின் 67 ரன்களும் ஜடேஜா 51 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 282 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி.
நான்காம் நாளின் கடைசி 20 நிமிடங்களில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்தது. 5வது நாளான இன்று இங்கிலாந்தின் அனைத்து விக்கெட்டுகளையும் 282 ரன்களுக்குள் சுருட்டி, வெற்றி பெறலாம் என்ற முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியது.
ஆனால், இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகிய இருவருமே மிக கவனமாக தடுப்பாட்டம் ஆடி, ஆமை வேகத்த்தில் ரன் சேர்த்தனர். இதனால், 5வது நாளின் உணவு இடைவேளையில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் குக் 47* ரன்களிலும் ஜென்னிங்ஸ் 46* ரன்களிலும் ஆட்டமிழக்கமால் உள்ளனர். இனிமேல், இங்கிலாந்தின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்பதால் ஆட்டம் டிரா ஆகும் என்று இப்போது தெரிந்துவிட்டது.
5வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அஸ்வின் பந்தில் குக் கொடுத்த ஒரு கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் பார்த்தவ் கோட்டை விட்டார். அமித் மிஷ்ரா பந்தில் ஜென்னிங்ஸ் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை கே.எல்.ராகுல் நழுவ விட்டார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து 477 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அபாரமாக 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 199 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின், கருண் நாயர் படிப்படியாக அதிரடிக்கு மாறினார். அபாரமாக ஆடிய அவர் அடுத்தடுத்து சாதனைகளைத் தன்வசமாக்கி முச்சதம் விளாசினார். அவருக்குத் துணையாக, அஸ்வின் 67 ரன்களும் ஜடேஜா 51 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 282 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி.
நான்காம் நாளின் கடைசி 20 நிமிடங்களில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்தது. 5வது நாளான இன்று இங்கிலாந்தின் அனைத்து விக்கெட்டுகளையும் 282 ரன்களுக்குள் சுருட்டி, வெற்றி பெறலாம் என்ற முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியது.
ஆனால், இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகிய இருவருமே மிக கவனமாக தடுப்பாட்டம் ஆடி, ஆமை வேகத்த்தில் ரன் சேர்த்தனர். இதனால், 5வது நாளின் உணவு இடைவேளையில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் குக் 47* ரன்களிலும் ஜென்னிங்ஸ் 46* ரன்களிலும் ஆட்டமிழக்கமால் உள்ளனர். இனிமேல், இங்கிலாந்தின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்பதால் ஆட்டம் டிரா ஆகும் என்று இப்போது தெரிந்துவிட்டது.
5வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அஸ்வின் பந்தில் குக் கொடுத்த ஒரு கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் பார்த்தவ் கோட்டை விட்டார். அமித் மிஷ்ரா பந்தில் ஜென்னிங்ஸ் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை கே.எல்.ராகுல் நழுவ விட்டார்.