ஆப்நகரம்

சுள்ளான்னு நினைக்காதீங்க சூடானேன் சுளுக்கெடுத்துருவேன்: குல்தீப்!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

TOI Sports 10 Aug 2017, 4:02 pm
பல்லேகலே: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil chinaman kuldeep yadav ready with his tricks
சுள்ளான்னு நினைக்காதீங்க சூடானேன் சுளுக்கெடுத்துருவேன்: குல்தீப்!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும், மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 12ல் கண்டியில் துவங்கிறது.

பேட்ஸ்மேனை தாக்கும் நோக்கத்தில் பந்தைவீசிய காரணத்துக்காக, இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜாவிற்கு, ஒரு டெஸ்டில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜடேஜாவால், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இவரது இடத்தை பூர்த்தி செய்ய, இளம் வீரர் அக்‌ஷர் படேல் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால், கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக்கொள்வேன் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில்,’ அணியின் கேப்டனின் நம்பிக்கையை பெற்றுவிட்டால், பாதிவேலை முடிந்த மாதிரிதான். வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது கோலி என்னிடம் கணிவாக பேசினார். சிறுவயதில் இதைவிட மிகவும் சவாலான சிமெண்ட் ஆடுகளத்தில் விளையாடிவுள்ளேன். அதனால் இலங்கை ஆடுகளம் பெரிய விஷயமல்ல. ‘ என்றார்.


PALLEKELE: "Sir, aapka bowling aa gaya hai," veteran pacer Ishant Sharma nudged newcomer Kuldeep Yadav, who immediately sprinted to the nets where Team India coach Ravi Shastri, skipper Virat Kohli and all other batsmen were waiting for him to dish out his 'chinaman' stuff

அடுத்த செய்தி

டிரெண்டிங்