ஆப்நகரம்

கிறிஸ் கெய்லுக்கு வந்த கஷ்ட காலம் : பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் ஒரு அணியும் சீண்டாத ஆச்சர்யம்

பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடரில் கிறிஸ் கெய்லை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

TOI Sports 14 Nov 2017, 4:28 pm
பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடரில் கிறிஸ் கெய்லை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil chris gayle finds no takers in pakistan super league
கிறிஸ் கெய்லுக்கு வந்த கஷ்ட காலம் : பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் ஒரு அணியும் சீண்டாத ஆச்சர்யம்


ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பல்வேறு நாடுகளில், ஐபிஎல் போன்று கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைப்பெறுகின்றன.

ஐபிஎல் என்றாலே நினைவுக்கு வருவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான். அதிலும் கிறிஸ் கெய்ல் தான். அவரின் அதிரடி சதம், சிக்ஸர்கள் யாராலும் மறக்க முடியாத ஒன்று.

பாகிஸ்தானில் நடக்கும் கிரிக்கெட் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைப்பெற்றது. அதில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக கிறிஸ் கெய்ல் எந்த அணிகளும் ஏலம் எடுக்கவில்லை.

அண்மை காலமாக கெய்ல் ஃபார்ம் இன்றி தவித்து வருகின்றார். அதனால் அவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மற்றொருபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2019ல் நடைப்பெறும் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு நேரடியாக தகுதி பெறாததால், அதற்கான தகுதிப் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியும், உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியும் ஒரே நேரத்தில் வருவதால், கெய்லை ஏலத்தில் எடுத்தாலும் முழு தொடரிலும் விளையாட மாட்டார் என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் அணிகள் கெய்லை ஏலத்தில் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்