ஆப்நகரம்

பரிதவித்த கிறிஸ் கெயிலை பர்சேஸ் பண்ண பஞ்சாப்!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சிக்சர் ராட்ஷன் கெயிலை அடிப்படை தொகைக்கு மூன்றாவது சுற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

Samayam Tamil 28 Jan 2018, 4:12 pm
பெங்களூரு: இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சிக்சர் ராட்ஷன் கெயிலை அடிப்படை தொகைக்கு மூன்றாவது சுற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
Samayam Tamil chris gayle sold to kxip
பரிதவித்த கிறிஸ் கெயிலை பர்சேஸ் பண்ண பஞ்சாப்!


இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்.,) நடக்கிறது. இது வெற்றிகரமாக 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளது.

இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில் சென்னை அணி, தங்களின் ஆஸ்தான வீரர்களான தோனி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் சிக்சர் ராட்ஷன் கிறிஸ் கெயிலை, ஏலத்தில் அவரது அடிப்படை தொகையான ரூ. 2 கோடிக்கு கூட எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை.

ஆனால் மூன்றாவது முறையாக கிறிஸ் கெயிலை ஏலத்தில் அறிவித்த போது அதிரடி மன்னனான சேவக் ஆலோசகராகவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரது அடிப்படை ஏல தொகையான ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்