ஆப்நகரம்

பஞ்சாப்பை பறக்கவிட்டு பிளே ஆஃபில் கெத்தாக நுழைந்தது புனே!

பஞ்சாப் அணிக்கு எதிரான, தன் கடைசி போட்டியில் புனே அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

TOI Sports 14 May 2017, 6:36 pm
புனே : பஞ்சாப் அணிக்கு எதிரான, தன் கடைசி போட்டியில் புனே அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Samayam Tamil clinical rps seal play off spot in style
பஞ்சாப்பை பறக்கவிட்டு பிளே ஆஃபில் கெத்தாக நுழைந்தது புனே!

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 55வது போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே புனேவில் நடைப்பெறுகிறது.

டாஸ்வென்ற புனே அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.

பஞ்சாப் அணியின் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அவுட்டாக 4 வீரர்கள் மட்டும் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். அதில் அக்ஸர் பட்டேல் 22 ரன்கள் மட்டும் எடுத்தார்.

புனே அணியின் சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், உனத்கட், டேனியல் கிறிஸ்டியன், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்த 15.5 ஓவரில் பஞ்சாப் அணி 73 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பிளே ஆஃபில் புனே:
தொடர்ந்து களமிறங்கிய புனே அணிக்கு திரிபாதி 20 பந்தில் 28 ரன்கள் என அதிரடி காட்டி அவுட்டாக, மறுமுனையில் ரஹானே 34 ரன்கள், ஸ்மித் 15 ரன்கள் எடுத்து அசத்த 12 ஓவரில் 78 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

14 போட்டியில் 9 வெற்றிகளை பெற்றதன் மூலம் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு கெத்தாக முன்னேறியுள்ளது புனே அணி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்