ஆப்நகரம்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்காக 2 ஆண்டு சம்பளத்தை வழங்கிய காம்பீர்!

புதுடெல்லி: கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய காம்பீர், கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனது இரண்டு ஆண்டு சம்பளத்தை அளித்துள்ளார்.

Samayam Tamil 2 Apr 2020, 4:55 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர். இவர் கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் அரசியலில் களமிறங்கினார். இந்நிலையில் தற்போது உலகம் முழுதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவைப்படும் உபகரணங்கள் வாங்க ஏற்கனவே ரூ. 1 கோடி வழங்கினார்.
Samayam Tamil கவுதம் காம்பீர்


2 ஆண்டு சம்பளம்
இந்நிலையில் காம்பீர் தற்போது தனது இரண்டு ஆண்டு எம்.பி சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதியாக வழங்கவுள்ளார். இதை கிழக்கு டெல்லியின் பாஜ லோக்சபா உறுப்பினர் தனது ட்விட்டர் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். அதே போல மக்களும் உதவ முன்வர வேண்டும் என்றும் காம்பீர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுகுறித்து காம்பீர் கூறுகையில், “மக்கள் தங்கள் நாடு தங்களுக்கு என்ன செய்தது என கேட்கிறார்கள். ஆனால் உண்மையில் நாம் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதே கேள்வி. நான் எனது 2 ஆண்டு சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன். நீங்களும் உதவி செய்ய முன்வர வேண்டும்” என்றார்

கிங் கோலியுடன் நேரலையில் பேசும் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்!

ஜெயில் தண்டனை
முன்னதாக கடந்த 22ஆம் தேதி கொரோனா பரவுவதை தவிர்க்கும் நோக்கில் இந்தியா முழுதும் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் சிலர் லாக் டவுன் நேரமான 9 மணிக்கு பின், கூட்டம் கூட்டாக வீதிகளில் குவிந்தனர். இதனால் கடுப்பான காம்பீர், தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் அப்படி செய்யாதவர்களை ஜெயிலில் அடைக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

தோனி சிக்ஸால மட்டும் உலகக்கோப்பை வெல்லவில்லை : காம்பீர்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்