கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதனால் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 40 பேர் உயிர் இழந்தனர். தவிர பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, மற்றொரு மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுள்ள வங்கதேச அணி வீரர்கள் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மசூதியில் இருந்தனர். ஆனால் அவர்கள் பத்திரமாக தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர்கள் ஹோட்டலில் உள்ளதாகவும், ஆனால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் என வங்கதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோத இருந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
ஐசிசி., அறிக்கை :
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்ட்சர்ச் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். இரு அணிகளும், போட்டி அதிகாரிகள் பத்திரமாக உள்ளனர். கடைசி டெஸ்ட் போட்டியை ரத்து செய்த முடிவுக்கு ஐசிசி., முழு ஆதரவு அளிக்கிறது.’ என குறிப்பிட்டுள்ளது.
கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி:
திடீரென நடக்கும் நேரடி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்புவது சாதாரண காரியம் இல்லை. இது ரொம்பவே மோசமான உலகம். என இந்த தாக்குதலுக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மற்றொரு மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுள்ள வங்கதேச அணி வீரர்கள் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மசூதியில் இருந்தனர். ஆனால் அவர்கள் பத்திரமாக தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர்கள் ஹோட்டலில் உள்ளதாகவும், ஆனால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் என வங்கதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோத இருந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்ட்சர்ச் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். இரு அணிகளும், போட்டி அதிகாரிகள் பத்திரமாக உள்ளனர். கடைசி டெஸ்ட் போட்டியை ரத்து செய்த முடிவுக்கு ஐசிசி., முழு ஆதரவு அளிக்கிறது.’ என குறிப்பிட்டுள்ளது.
கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி:
திடீரென நடக்கும் நேரடி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்புவது சாதாரண காரியம் இல்லை. இது ரொம்பவே மோசமான உலகம். என இந்த தாக்குதலுக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.