ஆப்நகரம்

கிரிக்கெட் வீரரின் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை!!

இலங்கை வீரர் தனஞ்ஜெய டி சில்வாவின் தந்தையை, மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

Samayam Tamil 25 May 2018, 10:02 pm
இலங்கை வீரர் தனஞ்ஜெய டி சில்வாவின் தந்தையை, மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
Samayam Tamil கிரிக்கெட் வீரரின் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை!!
கிரிக்கெட் வீரரின் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை!!


இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான தனஞ்ஜெய டி சில்வா (26), மேற்கிந்தியத் தீவுகள் அணிவுடனான தொடரில் பங்கேற்க கிளம்பிக் கொண்டிருந்த போது, அவரது தந்தை ரன்ஜனை அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

அவரது தந்தை உள்ளூர் அரசியல்வாதி என்பதால், அரசியல் காரணத்துக்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால், தனஞ்ஜெய டி சில்வா மேற்கிந்தியத் தீவுகள் உடனான தொடரிலிருந்து விலகி உள்ளார்.

முன்னதாக, இலங்கை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் திமுத் கருணரத்னே, பயிற்சியின் போது விரலில் காயம் ஏற்பட்டதால், ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்