விலங்குகளின் மேல் மிகவும் பிரியம் கொண்ட கிரிக்கெட் நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா சிங்கத்தை முத்தமிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் வீரராக திகழும் ரவீந்திர ஜடேஜா அவ்வப்போது சர்ச்சைக்களில் சிக்குவது வாடிக்கையாகவே வைத்துள்ளார்.
ஜடேஜாவின் திருமணத்தின் போது அவரது உறவினர் ஒருவர் கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடியது சர்ச்சையை கிளப்பியது.
அந்த சர்ச்சை அடங்குவதற்குள், ஜடேஜாவும் அவரது மனைவியும் தேனிலவு சமயத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் சரணாலயத்தில் சிங்கக் கூடத்திற்கு முன் ஜடேஜாவும் அவரது மனைவியும் செல்பி எடுத்துக்கொண்டது பெரும் சர்ச்சையானது. இதனால் ஜடேஜா மீது புகாரும் பதியப்பட்டது.
இந்நிலையில் தற்போது சிங்கத்துக்கு முத்தமிடுவது போல ஒரு புகைப்படத்தை அவரது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் அதில் குறிப்பிடப்படவில்லை.
No caption needed🤐😜👊#buddy #funwithlion #rajputboy A post shared by Ravindrasinh Jadeja (@royalnavghan) on Feb 18, 2017 at 7:09pm PST
கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும், அடிக்கடி இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபடுவது ஜடேஜா மேல் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.