ஆப்நகரம்

இலங்கைக்கு எதிராக படுதோல்வி…ஷிகர் தவன் செய்த இந்த தவறுதான் காரணம்: கனேரியா பளிச்!

இந்தியா, இலங்கை தொடர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா பேசியுள்ளார்.

Samayam Tamil 1 Aug 2021, 2:17 pm
இந்தியா, இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும், அடுத்த இரண்டு போட்டிகளில் படுமோசமாகச் சொதப்பி தோல்வியைச் சந்தித்து, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்தது.
Samayam Tamil ஷிகர் தவன்


தோல்விக்குக் காரணம்:

முதல் டி20 போட்டி முடிந்தப் பிறகு இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவுக்கு தொற்று உறுதியானது. இதனால் இவர் தனிமைப் படுத்தப்பட்டார். மேலும், இவருடன் தொடர்பில் இருந்த சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா போன்ற 8 முக்கிய வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் கடைசி இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள், 6 பௌலர்களுடன் களமிறங்கி, இரண்டு போட்டிகளிலும் தோற்றது.

மூன்றாவது போட்டி:

குறிப்பாக மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் படுமோசமாகச் சொதப்பினர். தவன் கோல்டன்-டக் ஆனார். ருதுராஜ், படிக்கல், சாம்சன் போன்றவர்களும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இந்த தோல்விக்குக் காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் டேனிஸ் கரேனியா, தவனின் கேப்டன்ஸிதான் தோல்விக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

“இந்திய அணியில் 6 பௌலர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் எதற்காக முதலில் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும்? முதலில் பந்து வீசியிருந்தால் 6 பௌலர்களையும் பயன்படுத்தி இலங்கை அணியை எளிதாக சுருட்டியிருக்க முடியும். ஆனால், அதை விடுத்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து, படுமோசமாகச் சொதப்பி, போட்டியை இலங்கைக்கு விட்டுக்கொடுத்துவிட்டனர்” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய கனேரியா, “இலங்கை பௌலர்கள் எவ்வித சிரமங்களும் இன்றி விக்கெட்களை வீழ்த்தினார்கள். இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததுதான் தவறு” எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்