ஆப்நகரம்

நிவர் புயல்: சென்னைவாசிகளை நலம் விசாரித்த வார்னர்!

தமிழகத்தை நிவர் புயல் தாக்கியுள்ள நிலையில், சென்னை மக்களை நலம் விசாரித்து டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 25 Nov 2020, 7:56 pm
வங்க கடலில் உருவான நிவர் புயல் சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல், இன்னும் 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் எனக் கூறப்படுகிறது.
Samayam Tamil david warner


இந்நிலையில், புயலால் உருவான கருமேகக் கூட்டங்களை இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வைரலாக்கி வருகின்றனர். இதன் ஒரு வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “சென்னையில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” என நலம் விசாரித்துள்ளார்.

தமிழக மக்கள் மீது வார்னருக்கு இருக்கும் அக்கறையைப் பாராட்டி வரும் நெட்டிசன்கள், “என்னா மனுசன்யா”, “எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம நலம் விசாரிக்கிறாரு பாரு, அந்த மனசுதான் கடவுள்” என வார்னரை புகழ்ந்து வருகின்றனர்.

இந்திய-ஆஸ்திரேலிய தொடர் வருகிற வெள்ளிக்கிழமை முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் சிட்னியில் மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் இருந்து பயிற்சிபெற்று வருகின்றனர்.

இதில் தமிகத்தைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்