ஆப்நகரம்

வார்னர் செய்த தவறுக்கு நான்தான் காரணம்: மனைவி நெகிழ்ச்சி

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பந்தைச் சேதப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டதற்கு அவது மனைவி பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளார்.

Samayam Tamil 1 Apr 2018, 3:20 pm
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பந்தைச் சேதப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டதற்கு அவது மனைவி பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளார்.
Samayam Tamil candice-warner-feat


தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் பந்தைச் சேதப்படுத்தும் திட்டத்தைத் தீட்டியதற்காக ஓராண்டு தடைசெய்யப்பட்டுள்ளார். மேலும் 2 ஆண்டுகளுக்கு எந்தவிதமான தலைமைப் பொறுப்புக்கும் வார்னர் பரீசிலிக்கப்பட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ள வார்னரின் மனைவி கான்டைஸ் வார்னர், “இது நான் செய்த தவறு என்றே எனக்குத் தோன்றுகிறது. இது என்னைக் கொல்லும் அளவுக்கு மிகவும் வருத்துகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது வார்னர் மற்றும் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி-காக் இடையே நடைபெற்ற மோதல்தான் வார்னரை பந்தைச் சேதப்படுத்தும் திட்டத்தைத் தீட்ட தூண்டியிருக்கிறது என்றும் காண்டைஸ் கூறியுள்ளார்.

அந்தப் போட்டியின் போது வார்னரின் மனைவியைப் பற்றி டி-காக் தவறாகப் பேசியதாகவும் அதனால் அவர் கோபமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் காண்டைஸ் வார்னர் தனது கணவரின் தவறுக்கு தானே காரணம் என்று நினைப்பதாகக் கூறியுள்ளார்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்