ஆப்நகரம்

‘வலியால் துடிக்கும் வார்னர்’: மனைவி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

டேவிட் வார்னர் உடல் நலம் குறித்து அவரது மனைவி கேண்டீஸ் வார்னர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 1 Dec 2020, 2:23 pm
சிட்னியில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்த டேவிட் வார்னருக்கு எதிர்பாராத விதமாக இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர், சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இவர் எதிர்வரும் மூன்றாவது ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil warner


இதுகுறித்து அவரது மனைவி கேண்டீஸ் வார்னர் ஒரு தனியார் வானொலிக்கு பேட்டிகொடுத்தார். அப்போது பேசிய அவர், ”எனது கணவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ளார். ஆனால், தற்போது வரை காயத்தின் தீவிரம் குறையவில்லை. அதிக வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். கணவருக்குக் காயம் ஏற்பட்டதால் இருவரும் நான்கு மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டோம். அது அற்புதமான தருணம்தான். இருப்பினும், அவருக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை” எனச் சொல்லிவிட்டு சிரித்தார்.

இந்திய அணி சொதப்பலுக்கு காரணம் இதுதான்: மைக்கேல் ஹோல்டிங் கணிப்பு!

“இடுப்பு பகுதியில் அவருக்கு வலி அதிகமாக உள்ளது. டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளார். அது ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறேன். காரணம், அவருக்குக் காயத்தின் தன்மை இன்னும் குறையவில்லை. அதிக வலியால் அவதிப்பட்டு வருகிறார். விரைவில் குணமடைந்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார். காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் எனக் கணவரிடம் வற்புறுத்தியதாகவும் கேண்டீஸ் வார்னர் கூறினார்.

வார்னர் எஞ்சியுள்ள ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் டார்சி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வார்னர் இருந்த துவக்க வீரருக்கான இடத்தில் யார் களமிறங்குவார் என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதுபற்றிப் பேசிய மார்னஸ் லபுஷேன், துவக்க வீரராகக் களமிறங்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சிறப்பாக விளையாடுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் மார்னஸ் லபுஷேன்தான் ஓபனராக களமிறங்குவார் எனக் கூறி வருகின்றனர். இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி நாளை துவங்க உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்