ஆப்நகரம்

தோனி தங்கியிருந்த ஹோட்டலில் அலாரம் கூட இல்லை!

முன்னாள் இந்திய கேப்டன் தோனி, ஜார்கண்ட் அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் அலாரம் வசதி கூட இல்லை என வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

TOI Sports 17 Mar 2017, 3:43 pm
புதுடில்லி: முன்னாள் இந்திய கேப்டன் தோனி, ஜார்கண்ட் அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் அலாரம் வசதி கூட இல்லை என வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil dhoni hotel fire there were no fire alarms says bcci official
தோனி தங்கியிருந்த ஹோட்டலில் அலாரம் கூட இல்லை!


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடரைப்போலவே, 50 ஓவர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது நடக்கிறது.

இதில் தமிழகம் அணி ஏற்கனவே ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி தலைமையிலான ஜார்கண்ட் அணி, இரண்டாவது அரையிறுயில் பெங்கால் அணியை எதிர்கொள்ள இருந்தது. இதற்காக தோனி மற்றும் அணி வீரர்கள் துவாரகாவில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு இன்று காலை, திடீரென் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் இதில் எந்த வீரருக்கும் காயம் ஏற்படாமல் வெளியேறினர். அவர்கள் தாங்கள் கொண்டு சென்ற பொருட்களை அப்படியே ரூமிலேயே விட்டுவிட்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.

இதற்கு அந்த ஹோட்டலில், அலாரம் வசதி கூட என வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தான் தீ விபத்து ஏற்பட்டது எந்த வீரருக்கும் தெரியாமல் போனது என்றும், அவர்கள் தங்கியிருந்த ரூம் முழுவதுமாக புகை மண்டலம் சூழ்ந்து கொண்ட பின் தான் இந்த விபத்து குறித்து தெரியும் என வீரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


NEW DELHI: MS Dhoni and his Jharkhand team escaped a fire which broke out at ITC hotel in Dwarka early on Friday morning.

அடுத்த செய்தி

டிரெண்டிங்