ஆப்நகரம்

ஆடுனது போதும்;ஆளை விடுங்க-மைதானத்தில் உறங்கிய டோனி

இலங்கை ரசிகர்களின் ஆரவாரத்தால் சற்று நேரம் நிறுத்தி வைக்க போட்டியில், டோனி சிறிது நேரம் மைதானத்திலேயே தூங்கி ஓய்வெடுத்தார்.

TNN 28 Aug 2017, 11:08 am
இலங்கை ரசிகர்களின் ஆரவாரத்தால் சற்று நேரம் நிறுத்தி வைக்க போட்டியில், டோனி சிறிது நேரம் மைதானத்திலேயே தூங்கி ஓய்வெடுத்தார்.
Samayam Tamil dhoni slept in the ground
ஆடுனது போதும்;ஆளை விடுங்க-மைதானத்தில் உறங்கிய டோனி


இந்தியா, இலங்கை இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பல்கேரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. பும்ரா தன் சிறந்த பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

218 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 44ஆவது ஓவரில் 210 ரன்கள் எடுத்ததால், ஏமாற்றமடந்த இலங்கை ரசிகர்கள் பாட்டில்களை மைதானத்தில் தூக்கி எறிந்தனர். இதனால் சற்று நேரம் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையொட்டி மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த டோனியும், ரோகித்தும் குஷியாக பேசிக் கொண்டிருந்த பின்னர் டோனி மைதானத்திலேயே தூங்கி குட்டு தூக்கம் போட்டார். மீண்டும் சிறிது நேரத்தில் போட்டி ஆரம்பித்து இந்திய அணி வெற்றி பெற்றது. மைதானத்தில் டோனி உறங்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Dhoni slept in the ground.

அடுத்த செய்தி

டிரெண்டிங்