ஆப்நகரம்

போட்டி தொடங்குவதற்கு முன் திடீரென அணி வீரர்களை மாற்றிய கோலி?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணி கேப்டன் கோலி அணி வீரர்கள் மாற்றியதாக தெரிகிறது.

TOI Sports 10 Nov 2016, 7:16 pm
ராஜ்கோட்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணி கேப்டன் கோலி அணி வீரர்கள் மாற்றியதாக தெரிகிறது.
Samayam Tamil did virat kohli change team indias lineup in the last moment
போட்டி தொடங்குவதற்கு முன் திடீரென அணி வீரர்களை மாற்றிய கோலி?


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 9) தொடங்கியது.



இந்த போட்டி தொடங்குவதற்கு முன் போட்டியில் களமிறங்கும் 11 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ.,யின் அதிகாரப்பூர்வமான டுவிட்டரில் வெளியானது.
பி.சி.சி.ஐ., வெளியிட்ட முதல் டுவிட்டில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருந்தார். அதன் பின் அடுத்த 10 நிமிடங்களுக்கு பின் பாண்டியாவின் பெயர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக அமித் மிஸ்ராவின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இது டுவிட்டரில் பதிவிட்டவரின் தவறாக இருக்கலாம் அல்லது அணியிலிருந்து பாண்டியாவை நீக்கிவிட்டு மிஸ்ராவை சேர்க்கலாம் என கோலி கூறியிருக்கலாம் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்