ஆப்நகரம்

Yuvraj Singh: ‘தல’ தோனியுடன் ரிஷப் பந்த்தை ஒப்பிடலாமா? ... : யுவராஜ் சிங் கருத்து என்ன?

MS Dhoni : இந்திய கிரிக்கெட் வீரர் இளம் ரிஷப் பந்த்தை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியுடன் ஒப்பிடுவது சரியானதா என யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Sep 2019, 3:42 pm
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் இடத்தை பூர்த்தி செய்ய, இந்திய தேர்வுக்குழுவினர் ரிஷப் பந்த்துக்கு அதிக வாய்ப்பு வழங்கி வருகிறது.
Samayam Tamil Rishabh pant


யுவராஜ் சிங் கருத்து...
இதற்கிடையில் சீனியர் தோனியுடன் தற்போது வந்த ஜூனியர் ரிஷப் பந்தை ஒப்பிடுவது சரியானதாக இருக்குமா என முன்னாள் ‘ஆல் ரவுண்டர்’ யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

யாராவது பேச வேண்டும்....
இந்நிலையில், ரிஷப் பந்த் தற்போது தான் தயாராகிக்கொண்டுள்ளார், அதனால் தற்போது அவருக்கு அதிகளவில் நெருக்கடி கொடுக்க கூடாது. ஆனால் அவரின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் இல்லை...
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில், ‘தோனி ஒரே நாளில் மிகச்சிறந்த வீரராக மாறவில்லை. அதனால் அவருக்கு இணையாக ஒரு வீரராக உருவாக்க நிச்சயமாக சில ஆண்டுகள் தேவைப்படும். உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 1 ஆண்டு உள்ளது.

உதவ வேண்டும்
அது போதுமான அளவு தான். அதற்குள் அவருக்கு போதுமான அளவு வாய்ப்புகள் வழங்கி, அவரின் திறமையை வெளியே கொண்டு வர வேண்டியது அவசியம். அதை அவரை தொடர்ந்து கண்கானிக்கும் பயிற்சியாளர், கேப்டன், போன்றவர்கள் நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். ’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்