ஆப்நகரம்

‘பயங்கர சம்பவம்’...உலகக் கோப்பை ஆட்டத்தின்போது நிலநடுக்கம்: குலுங்கிய மைதானம்..வீடியோ இதோ!

உலகக் கோப்பை ஆட்டத்தின்போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 30 Jan 2022, 3:52 pm
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் அனைத்தும் நடந்து முடிந்து அரையிறுதி, இறுதிப் போட்டிகள் மட்டும் எஞ்சியிருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணியும், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளும் மோதவுள்ளன.
Samayam Tamil குயின்ஸ் பார்க்


இந்நிலையில் தொடரிலிருந்து வெளியேறிய அணிகளுக்கு இடையில் தரவரிசையை நிர்ணயிக்க பிளேட் சுற்று ஆட்டகள் நடைபெற்று வருகிறது. இன்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் பங்கேற்று விளையாடின.

இப்போட்டியில் ஜிம்பாப்வே அணிதான் முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 5.4ஆவது ஓவரின்போது, கேமராக்கள் திடீரென்று ஆட்டம் காண துவங்கியது. பார்வையாளர்களும் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தனர். அப்போதுதான், வர்ணனை செய்துகொண்டிருந்த ஆண்ட்ரூ லெனார்ட், பூகம்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், ‘‘பூகம்பம் ஏற்பட்டுள்ளதுபோல் உணர்ந்தேன். அது உண்மைதான் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. பெரிய ரயில் ஓடினால் எப்படி நிலம் அதிருமோ, அதேபோல் நிலம் அதிர்ந்தது. மைதானமும், கட்டிடங்களும் பயங்கரமாக குலுங்கின’’ என நேரலையில் கூறினார். இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள்வரை நீடித்தது. ரிக்டர் அளவு கோளில் 5.2ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது களத்தில் இருந்த வீரர்கள் இதனை கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 166 ரன்கள் அடித்த நிலையில், அடுத்துக் களமிறங்கிய அயர்லாந்து அணி 30ஆவது ஓவரில் இலக்கை எட்டி, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்