ஆப்நகரம்

england vs pakistan:கெத்துக்காட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்... பலிக்காத பாகிஸ்தான் பௌலர்களின் பாச்சா!!

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னின்ஸில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

Samayam Tamil 21 Aug 2020, 11:39 pm
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னின்ஸில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை மிரட்டும் வகையில் பேட் செய்த ஜாக் கிரௌலி சதம் விளாசினார்
Samayam Tamil eng


தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் 6, டோமினிக் சிப்லி 22 எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்பு, களமிறங்கிய ஜாக் கிரௌலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு டஃப் கொடுத்தார். கேப்டன் ஜோ ரூட் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்து 29 எடுக்க, ஒல்லி போப் 3 ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்.

இங்கிலாந்து அணி 127 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. எஞ்சியுள்ள விக்கெட்களை சீக்கிரம் வீழ்த்தி பாகிஸ்தான் அணி பேட் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் ஜாக் கிரௌலி மற்றும் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்று விளையாடி வருகிறார்கள்.

England vs Pakistan: மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் - கலக்கப் போவது யாரு?

ஜாக் கிரௌலி 269 பந்துகளை சந்தித்து 19 பவுண்டரிகளுடன் 171 எடுத்துள்ளார். ஜோஸ் பட்லர் 147 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 87 ரன்களை சேர்த்துள்ளார். இந்த பார்ட்னர்ஷிப் 309 பந்துகளை சந்தித்து 205 ரன்கள் குவித்துள்ளது.

மொத்தம் 12 இன்னிங்ஸ் விளையாடியிருக்கும் ஜாக் கிரௌலிக்கு இது முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாகச் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பட்லர் தனது திறமையை நிரூபித்து 18 ஆவது அரை சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

இளம் வயதில் சதம் விளாசிய மூன்றாவது இங்கிலாந்து வீரராக ஜாக் கிரௌலி (22 வருடம் 200 நாள்) உள்ளார். இதற்கு முன்பு, 21 வயதில் குக், 22 வயதில் போதம் சதம் எடுத்துள்ளனர்.

“ரெய்னாவை மறக்கமுடியுமா?” பிரதமர் மோடி உருக்கமான கடிதம்!

முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். 25 ஓவர்கள் வரை பாகிஸ்தானால் ஒரு மெய்டன் ஓவர் கூட வீசமுடியவில்லை. இரண்டாவது செஷனிலும் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினாலும், இங்கிலாந்து பேட்ஸ்மன்களின் ரன் வேட்டையை தடுத்து நிறுத்த இயலவில்லை.

ஜாக் கிரௌலி, பட்லர் பாட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பௌலர்கள் திணறினர். சுழற்பந்து வீச்சாளர் யஷிர் ஷா 2 விக்கெட்களையும், ஷாஹின் அஃப்ரிதி, நசீம் ஷா தலா ஒரு விக்கெட்களையும் சாய்த்தனர்.

பாகிஸ்தான் அணி, வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து 7 முறை தோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்று, தோல்வியிலிருந்து அந்த அணி கெத்தாக மீண்டு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்