விசாகப்பட்டினம்: விசாகப்பட்டின டெஸ்டில், இந்திய வீரர்கள் தாக்குபிடிக்கமுடியாமல் சீட்டுக்கட்டாக சரிய, இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணி, 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இருஅணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இது இந்திய கேப்டன் விராட் கோலியின் 50 வது டெஸ்ட் போட்டியாகும். இதில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 455 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 255 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 298 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கோலி (56), ரகானே (22) அவுட்டாகாமல் உள்ளனர்.
இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டாக சரிந்தனர். முதலில் ரகானே (26), அஷ்வின் (7) பிராட் வேகத்தில் நடையைக்கட்ட, பின் வந்த சகா (2), ரவிந்திர ஜடேஜா (14) ஆகியோர் ரசித் சுழலில் சிக்கினர். தொடர்ந்து ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்த நாயகன் கோலியும், 81 ரன்கள் எடுத்த போது ரசித் சுழலில் சிக்கினார்.
கூடுதல் நேரம்:
இதையடுத்து இந்திய அணி, 184 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் வழக்கமான நேரத்துக்கு உணவு இடைவேளைக்கு போகாமல் கூடுதலாக அரைமணி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடைசி நேரத்தில் ஜெயந்த் யாதவ், முகமது ஷமி ஆகியோர் வேகமாக ரன்கள் சேர்க்க, இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில், 204 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பிராட், ரசித் தலா 4 விக்கெட் கைப்பற்றினார். ஆண்டர்சன், மொயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இருஅணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இது இந்திய கேப்டன் விராட் கோலியின் 50 வது டெஸ்ட் போட்டியாகும். இதில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 455 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 255 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 298 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கோலி (56), ரகானே (22) அவுட்டாகாமல் உள்ளனர்.
இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டாக சரிந்தனர். முதலில் ரகானே (26), அஷ்வின் (7) பிராட் வேகத்தில் நடையைக்கட்ட, பின் வந்த சகா (2), ரவிந்திர ஜடேஜா (14) ஆகியோர் ரசித் சுழலில் சிக்கினர். தொடர்ந்து ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்த நாயகன் கோலியும், 81 ரன்கள் எடுத்த போது ரசித் சுழலில் சிக்கினார்.
கூடுதல் நேரம்:
இதையடுத்து இந்திய அணி, 184 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் வழக்கமான நேரத்துக்கு உணவு இடைவேளைக்கு போகாமல் கூடுதலாக அரைமணி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடைசி நேரத்தில் ஜெயந்த் யாதவ், முகமது ஷமி ஆகியோர் வேகமாக ரன்கள் சேர்க்க, இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில், 204 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பிராட், ரசித் தலா 4 விக்கெட் கைப்பற்றினார். ஆண்டர்சன், மொயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.